ஓராண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதுபோன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “உங்களது ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் மகிழ்ச்சி மற்றும் வளமடைவார்கள் என நம்புகிறேன். வெற்றியின் பாதையில் பல உயரங்களை எட்டி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை வழிநடத்துவீர்கள் என நம்புகிறேன். நல்ல உடல்நலத்துடன் மக்கள் சேவையில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பணியாற்ற பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “ஓராண்டு நிறைவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆளுநருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே நீட் விலக்கு மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில்.. சில நாட்களுக்கு முன்பு, சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
**-பிரியா**
ஆளுநர் வாழ்த்து: நன்றி சொன்ன முதல்வர்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel