பிரதமருடன் ஒரே காரில் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி

Published On:

| By Kavi

விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அடையாறு கடற்படை தளத்துக்குப் புறப்பட்ட பிரதமர் மோடி தன்னுடைய காரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் அழைத்துச் சென்றார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாட்டு நிதிமூலம் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை உண்டாக்குகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி போராட்டமும் வெளிநாட்டு நிதி மூலம் தூண்டிவிடப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் 250 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அனுப்பப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் இருக்கும் நிலையில், “பேரவையிலிருந்து வரும் மசோதாக்கள் நிலுவையிலிருந்தால் அது நிராகரிக்கப்பட்டது எனப் பொருள்” எனவும் தெரிவித்தார்.

இந்தச்சுழலில் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 8) சென்னைக்கு வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை டூ கோவை வந்தே பாரத் ரயில் சேவை ஆகியவற்றைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு வந்து ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.

அங்கு சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் அங்கிருந்து மீண்டும் அடையாறு கடற்படை தளத்துக்கு கார்மூலம் புறப்பட்டார்.

அப்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் பிரதமரின் காரில் சென்றார். தமிழக ஆளுநருக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்த இந்த சூழலில் இருவரும் ஒரே காரில் பயணித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரியா

“தமிழக மக்களை நேசிக்கிறேன்”: பிரதமர் மோடி

நாகார்ஜுனாவுடன் இணையும் இளம் நடிகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share