மாநில அரசின் மிரட்டல் காரணமாக, தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்று ஆளுநர் ரவி இன்று (ஏப்ரல் 25) குற்றம்சாட்டியுள்ளார். governor ravi says state government
உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டை குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டை மாநில அரசின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி பேசும்போது, “தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், அரசு பள்ளிகளோ ஒவ்வொரு ஆண்டும் கீழே சென்று கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் உயர்நிலை மாணவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு புத்தகங்களைக் கூட சரியாக படிக்க தெரியவில்லை. 11 முதல் 99 வரை உள்ள இரண்டு இலக்க எண்களைக் கூட அவர்களால் சரியாக சொல்ல முடிவதில்லை.
இதேநிலை தான் தமிழக அரசின் பல்கலைழகங்களிலும் தொடர்வதை பார்க்க முடிந்தது. அதேவேளையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் 6,500 பேர் பி.எச்டி பட்டப்படிப்பை முடிக்கிறார்கள். இது உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது.

ஆனால், இந்த 6,500 பேரில் ஒரு சதவிகிதம் பேர் கூட NET தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 14 அல்லது 15 ஆயிரம் ரூபாய்க்கு தூய்மை பணி வேலைக்கு செல்கிறார்கள். நான் தூய்மை பணி செய்வதை தவறாக சொல்லவில்லை. ஆனால், பி.எச்டி படித்துவிட்டு இந்த சம்பளத்திற்கு வேலை செய்வது நல்லது இல்லை.
ஒரு காலத்தில் சென்னை பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால், இன்றைக்கு பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிட்டது. governor ravi says state government
ஏழைகள், தலித், சிறுபான்மையினர், பழங்குடி மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்க முடியாது. அவர்கள் அரசு பல்கலைக்கழகங்களை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த ஒடுக்குமுறையை அவர்களுக்கு எதிராக தொடர்ந்து செய்துவருகிறார்கள்.
இதனால் தான் 2021-ஆம் ஆண்டு முதல் துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாட்டை நடத்தி வருகிறோம். இதனால் பல்கலைக்கழகங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. ஆனால், அரசு இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
இதையெல்லாம் பற்றி தான் இந்த மாநாட்டில் விவாதிக்கலாம் என்று பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், எதிர்பாராதவிதமாக மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று மாநில அரசு அவர்களை எச்சரித்ததாக என்னிடம் சொன்னார்கள். சில துணை வேந்தர்கள் உதகைக்கு வந்தும் கூட அவர்கள் இந்த மாநாட்டிற்கு வரவில்லை.
நள்ளிரவில் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளின் கதவைத் தட்டிய மாநில உளவுத்துறை போலீஸ், ‘நீங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டால், உங்களால் வீடு திரும்ப முடியாது. கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள்’ என்று மிரட்டியுள்ளனர். அவர்களிடம் நான், ‘உங்களையும் உங்கள் குடும்பங்களையும் பார்த்துக்கொள்ளுங்கள். ரிஸ்க் எடுக்க வேண்டாம்’ என்று கூறினேன். கல்வின் தரத்தை மெருகேற்றுவதற்கான மாநாடு தான் இது. இதில் எந்த அரசியலும் இல்லை” என்று ஆளுநர் ரவி தெரிவித்தார். governor ravi says state government