திருவள்ளூர், கடலூர் மாவட்ட கலெக்டர்களை அழைத்து விருது கொடுத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.
போர் மற்றும் போரையொட்டிய நடவடிக்கையில் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த முப்படைகளை சேர்ந்த வீரர்கள், ஊனமுற்ற வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
தியாகிகளுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக இந்த கொடிநாளில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொடி விற்பனை செய்து பணத்தை சேமித்து மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
அந்தவகையில், முப்படைவீரர் கொடி நாள் நிதிவசூலில் 5.34 கோடி வசூல் செய்து தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர் 5.34 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டரை பாராட்டும் வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகைக்கு அழைத்து குடியரசு தினமான நேற்று (ஜனவரி 26) விருது வழங்கியுள்ளார்.
அதுபோன்று கடலூர் ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜும் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 1 கோடியே 25 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு கொடி விற்பனை செய்துள்ளார்.
கடலூர் ஆட்சியரையும் ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்த ஆளுநர் ஆர் என் ரவி பாராட்டி விருது கொடுத்துள்ளார்.
“கலெக்டர் அருண் தம்புராஜு கொடி மூலமாக நிதி சேகரித்தது மட்டும் அல்ல, மாவட்டத்தில் நல்ல திட்டங்களையும் மக்களுக்கு தேவையானதையும் அறிந்து செயல் படுத்துவார்.
தனது மேசைக்கு வரக்கூடிய கோப்புகளை உடனுக்குடன் கையெழுத்து போட்டு க்ளியர் செய்து மாவட்ட மக்களிடமும் அதிகாரிகளிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்” என்கிறார்கள் கடலூர் மாவட்ட மக்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி, பிரியா
”இருவர் வானம் வேறென்றாலும்” காதலர் குறித்து பிரியா பவானி ஷங்கர் உருக்கம்!