தமிழ்நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தரை பரிந்துரைப்பதற்கு தேடுதல் குழுவை அமைத்து கடந்த செப்டம்பரில் அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த தேடுதல் குழுவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
Among the first three Universities of India established in 1857, the University of Madras is without a Vice Chancellor for the last 5 months
The reason given is the Governor-government stand off
Why is the Governor of Tamil Nadu in the centre of many controversies in the State?…
— P. Chidambaram (@PChidambaram_IN) January 27, 2024
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1857 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது.
ஆளுநர் – அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடுதான் இதற்கு காரணம். தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக ஆளுநர் இருப்பது ஏன்? ஆளுநர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கோவை இளைஞரின் கேமராவில் சிக்கிய தங்கநிற புலி… எங்கேன்னு பாருங்க!
மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி: சந்தானம் படத்தை தயாரிக்கும் ஆர்யா