அதிகரித்து வரும் தங்கம் (Gold) விலை மற்றும் அரசாங்கத்தின் அதிகரித்த இறக்குமதி வரியின் தாக்கம் தற்போது நகை தொழிலில் தெளிவாகத் தெரிகிறது. கிரிசில் ரேட்டிங்ஸ் அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டில் தங்க நகைகளின் விற்பனை 13 முதல் 15 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் அதிக விலை காரணமாக, சாதாரண மக்கள் நகைகள் வாங்குவதைத் தவிர்த்து, எடை குறைந்த மற்றும் குறைந்த காரட் கொண்ட நகைகளை வாங்குகின்றனர். இருப்பினும், விலை உயர்வால் நகை வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், அரசாங்கம் சமீபத்தில் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தியுள்ளது. இது தங்க நகைகளின் (Gold jewellery) விலையை அதிகரித்து நுகர்வோர் வாங்குதலை நேரடியாகப் பாதித்துள்ளது. இருப்பினும், விற்பனை அளவு குறைந்த போதிலும் தங்கத்தின் விலை உயர்வால் நகை வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கக்கும். அந்த அறிக்கையின்படி, இந்த நிதியாண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட நகை வியாபாரிகளின் வருவாய் 20 முதல் 25% வரை அதிகரிக்கும்.
தங்கத்தின் விலை உயர்வால் மக்கள் இப்போது கனமான நகைகளுக்குப் பதிலாக எடை குறைந்த மற்றும் குறைந்த காரட் கொண்ட நகைகளை வாங்குகிறார்கள். 16 முதல் 22 காரட் வரையிலான நகைகள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், முதலீட்டிற்காக தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களின் விற்பனை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
2026 நிதியாண்டில் இந்தியா சுமார் 720 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. இதன் விளைவாக 72 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி (Forex) இழப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, தங்கம் இறக்குமதியைக் குறைப்பதற்காக அரசாங்கம் சுங்க வரிகளை அதிகரித்துள்ளது. அதிக விலைகள் மற்றும் அதிகரித்த இறக்குமதி வரிகள் காரணமாக, இந்த ஆண்டு மொத்த தங்க நகை விற்பனை 620 முதல் 640 டன்களாக குறயும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைவானதாகக் கருதப்படுகிறது.
