நேற்று தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்த நிலையில், இன்று (மார்ச் 28) தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.280 உயர்ந்து, ரூ.50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து, ரூ.53,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…