சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 29) சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.47 ஆயிரத்தை நெருங்கியிருப்பது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.90 அதிகரித்து ரூ.5,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 அதிகரித்து ரூ.82,200-க்கும் ஒரு கிராம் 70 காசுகள் அதிகரித்து ரூ.82.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா