சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 15) சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக 45 ஆயிரத்திற்கு கீழ் விற்பனையாகி வந்த நிலையில் இன்று விலை உயர்ந்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,700 அதிகரித்து ரூ.77,700-க்கும் ஒரு கிராம் ரூ.1.70 அதிகரித்து ரூ.77.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
