உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!

Published On:

| By Selvam

global investors meet mou pact

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 8) நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வில் பல்வேறு நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 7) துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் சிறப்பு தலைமை விருந்தினராக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

முதல் நாள் மாநாட்டில் ரிலையன்ஸ் ஜியோ, டாடா எலக்ட்ரானிக்ஸ், ஹூண்டாய், வின்ஃபாஸ்ட், டிவிஎஸ், பெகாட்ரான், ஜே.எஸ்.டபிள்யூ, கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

முதல் நாளான நேற்று மட்டும் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முன்னணி நிறுவனங்கள் கையெழுத்திட்டதாக தொழில்துறை செயலாளர் அருண் ராய் தெரிவித்தார்.

இந்தநிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது நாள் மாநாட்டில் ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

மாநாட்டில் எத்தனை கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்ற விவரங்களை  முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிட உள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பேராசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

வேலைவாய்ப்பு: அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share