“என்னை அதிமுகவில் சேர்க்க வேண்டும்”- நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்!

Published On:

| By Selvam

பிரதான வழக்கை முடிக்கும் வரை இடைக்கால நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் மகா தேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தமாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இடைக்காலமாக கட்சியில் சேர்க்க தனி நீதிபதி உத்தரவிட்டிருக்க வேண்டும். இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு இருக்க முடியாது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. பிரதான வழக்கை முடிக்கும் வரை இடைக்கால நிவாரணம் தங்களுக்கு வழங்க வேண்டும்.” என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

செல்வம்

“அரசு மருத்துவமனைகளில் முககவசம் கட்டாயம்”: மா.சுப்பிரமணியன்

45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share