ஜி20 மாநாடு: பிரதமர் மோடி – பைடன் சந்திப்பு!

Published On:

| By Selvam

ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை இன்று (செப்டம்பர் 8) அவரது இல்லத்தில் சந்தித்தார்.

ஜி20 மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனி ஆகியோர் இந்தியா வந்துள்ளனர்.

ஜி 20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைவர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்களுக்கு நாளை விருந்தளிக்கிறார். ஜி20 மாநாடு துவங்க உள்ள நிலையில் வங்க தேச பிரதமர் ஷேக் ஹஸினா, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜாக்னாநாத், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்குமான உறவுகள், தொழில் முதலீடுகள், ஜி20 கூட்டம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

“அடுத்த படத்தில் மாரிமுத்துவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன்” – மாரி செல்வராஜ்

வசூல் : பதானை முறியடித்த ஜவான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share