Gகௌதம் கார்த்தியுடன் வைபவி

Published On:

| By Balaji

கௌதம் கார்த்தியின் அடுத்த படமான இருட்டு அறையில் முரட்டு குத்து ” படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் வைபவி சாண்டில்யா.

ஹரஹர மஹாதேவகி படத்தை தொடர்ந்து அந்த படக்குழு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்க இருப்பதாக முதலில் செய்தி வெளியானது, ஆனால் படக்குழு அதனை உறுதி செய்யாத நிலையில், இந்த படத்தில் நாயகியாக நடிக்க `சக்க போடு போடு ராஜா’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்துள்ள வைபவி சாண்டில்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பாலமுரளி பாலா இசையமைக்கும் இந்தப் படத்தை புளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வழங்குகிறார். தருண் பாலாஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் அடல்ட் ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share