இன்று முதல் டீ, காபி விலை அதிகம்! 38 டோல்கேட்களில் சுங்க கட்டணம் ரூ.5 முதல் ரூ. 395 வரை உயர்வு அமல்!

Published On:

| By Mathi

Tea and Coffee Prices Hiked

தமிழ்நாட்டில் இன்று செப்டம்பர் 1-ந் தேதி முதல் 38 டோல்கேட்களில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதேபோல சென்னை உள்ளிட்ட நகரங்களில் 3 ஆண்டுகளுக்குப் பின் டீ கடைகளில் டீ, காபி விலையும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி 40 சுங்க சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று செப்டம்பர் 1-ந் தேதி விக்கிரவாண்டி உள்ளிட்ட 38 டோல்கேட்களில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வானது ரூ.5 முதல் ரூ.395 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
வாகன வகைகட்டண வகைபுதிய கட்டணம் (₹)பழைய கட்டணம் (₹)
கார், ஜீப், பயணிகள் வேன்ஒரு வழி105105
பல முறை பயணம்160155
மாதாந்திர3,1703,100
இலகு ரக வாகனம்ஒரு வழி185180
பல முறை பயணம்275270
மாதாந்திர5,5455,420
டிரக், பேருந்துஒரு வழி370360
பல முறை பயணம்555540
பல அச்சு வாகனம்ஒரு வழி595580
பல முறை பயணம்890870
மாதாந்திர17,82017,425

டீ, காபி விலை உயர்வு

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று முதல் டீ, காபி, பூஸ்ட், ராகிமால்ட் உள்ளிட்டவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. டீ தூள், காபி தூள் உள்ளிட்டவை விலை அதிகரிப்பால் 3 ஆண்டுகளுக்கு பின்னர் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிளாஸ் டீ விலை ரூ12-ல் இருந்து ரூ15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; ஒரு கிளாஸ் காபி விலை ரூ15-ல் இருந்து ரூ18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share