ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் கல்லூரிகள்!

Published On:

| By christopher

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், உதவி மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவ-மாணவியர் தங்கள் விருப்பப் படிப்புகளுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்து வருகின்றனர்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியும் என்பதால், அவர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் உள்ள கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதில் ஒன்றாக சென்னை மாநிலக் கல்லூரியிலும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மாநிலக் கல்லூரியின் முதல்வர் ராமன்,

‘‘தற்போது விண்ணப்ப பதிவு அனைத்தும் ஆன்லைன் மயமாக மாறி விட்டது. மாணவர்களுக்கு எந்த க்கல்லூரியில் எந்தெந்த படிப்புகள் உள்ளன என்பதே தெரியவில்லை. மேலும், ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது எனவும் தெரியவில்லை. 

எனவே, அவர்கள் நேரடியாக கல்லூரிகளை நாடுகின்றனர். அப்படி வரும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவி மையம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து கொடுக்கப்படுகிறது.

மேலும், அவர்கள் தேடி வந்த படிப்பு இந்தக் கல்லூரியில் இல்லாதபட்சத்தில், வேறு எந்த கல்லூரியில் உள்ளது என்று அவர்களுக்கு தெரிவித்து விரும்பிய படிப்பை தேர்வு செய்வதற்கு உதவி செய்யப்படுகிறது.

அந்தவகையில் கடந்த மூன்று நாட்களில் 400-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் இங்கு வந்து சென்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

RR vs KKR: ஜெய்ஸ்வால் அதிரடி சாதனைகள்… ராஜஸ்தான் அபார வெற்றி!

கிச்சன் கீர்த்தனா: தேங்காய் டிலைட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share