செவிலியர்களுக்கு இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி : தமிழக அரசு அழைப்பு!

Published On:

| By indhu

Free Foreign Language Training for Nurses - Tamil Nadu Govt

செவிலியர்களுக்கு வெளிநாட்டு மொழிகளில் இலவசமாக பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் செவிலியர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக அளிக்க தமிழக அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் நேற்று (ஜூன் 24) வெளியிட்ட செய்தி குறிப்பில், “முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது.

வெளிநாட்டு மொழியை கற்க விரும்பும் செவிலியர்கள் பி.எஸ்.சி. நர்சிங் அல்லது டிப்ளமா நர்சிங் படித்திருக்க வேண்டும். செவிலியர்களின் வசதியை கருத்தில்கொண்டு மொழிப்பயிற்சியானது ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

இப்பயிற்சியில் சேர விரும்பும் செவிலியர்கள் இதுகுறித்த முழு விவரங்களையும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 63791 79200 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிரேட் நிக்கோபார் திட்டத்திற்கு அனுமதி!

”திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” – வைரலாகும் பெண் எம்.பி.க்கள் புகைப்படம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share