தமிழ்நாட்டில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Published On:

| By christopher

தமிழ்நாட்டில் நான்கு ஐ.ஏ.எஸ்‌ அதிகாரிகளை இடமாற்றம்‌ செய்து தலைமைச்செயலாளர்‌ ஷிவ்தாஸ்‌ மீனா இன்று (செப்டம்பர் 25) உத்தரவிட்டுள்ளார்‌.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இடமாற்றம்‌ செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்‌ அதிகாரிகளின் விவரம்:

தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வணிக இயக்குனராக இருந்த அர்ச்சனா பட்நாயக்‌ ஐஏஎஸ், தற்போது சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் (பயிற்சி) ஆணையராக இருந்த கர்சஹாய்‌ மீனா ஐஏஎஸ் குடிமைப்பொருள்‌ வழங்கல்‌ மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குடிமைப்பொருள்‌ வழங்கல்‌ மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக இருந்த பூஜா குல்கர்னி ஐஏஎஸ், புவியியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக இருந்த நிர்மல்ராஜ்‌ ஐஏஎஸ், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வணிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அதிமுக கூட்டணியில் நாம் தமிழர்?: சீமான் பதில்!

“இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது” : கூட்டணி முறிவு குறித்து சி.டி.ரவி பதில்!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share