அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் அங்கு தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், நேற்று (ஜூலை 13) பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், மேடையில் பேசிக்கொண்டிருந்த டிரம்பின் காதில் குண்டடிப்பட்டது.
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் தற்போது டிரம்ப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாகவும், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப்பின் ஆதரவாளர் ஒருவரும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பற்களைப் பளபளப்பாக்க 10 வழிகள்!
டாப் 10 நியூஸ்: அமித்ஷா மத்திய பிரதேச பயணம் முதல் இளையராஜா இசை கச்சேரி வரை!
Comments are closed.