கால்பந்து: சாம்பியன் கோப்பையுடன் முதல்வரை சந்தித்த வீராங்கனைகள்!

Published On:

| By Jegadeesh

மகளிர் சீனியர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று (ஜூலை 3) வாழ்த்து பெற்றனர்.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியில் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி தமிழ்நாடு பெண்கள் அணி ஒன்பது புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற தமிழ்நாடு பெண்கள் அணி 15 புள்ளிகளுடன் தங்களுடன் மோதிய ஒடிசா, சண்டிகர், ஜார்க்கண்ட் , பஞ்சாப் மற்றும் கர்நாடகா அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தங்கள் வசப்படுத்தியது.

இந்நிலையில், மகளிர் சீனியர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்க கோப்பையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று (ஜூலை 3) வாழ்த்து பெற்றனர்.

அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடனிருந்தனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

திமுகவில் இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி களைவார்: பா.ரஞ்சித் நம்பிக்கை!

திருப்பதியில் புதுகெட்டப்பில் வலம் வந்த தனுஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share