அடுத்தடுத்து பட்டாசு வெடி விபத்து : 6 பேர் பலி!

Published On:

| By Kavi

Firecracker accidents in sivakasi

விருதுநகர், சேலம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Firecracker accidents in sivakasi

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம் புதுப்பட்டி பகுதியில் ராஜரத்தினத்துக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 

80க்கும் மேற்பட்ட அறைகளில் இங்குப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்த ஆலை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கி வருகிறது.

இந்த ஆலையில் இன்று (ஏப்ரல் 26) 30க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. வழக்கம்போல் பட்டாசுகளுக்கு மருந்து நிரப்பிக் கொண்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. 

இதில் இரண்டு அறைகள் சேதமடைந்து தரைமட்டமாகின. இதனால் அங்கு பணியிலிருந்த மூன்று பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் சார் ஆட்சியர் பிரியா, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் உயிரிழந்த மூன்று பேர் சிவகாசியை சேர்ந்த மாரியம்மாள், திருவாய்மொழி, கலைச்செல்வி என்பது தெரியவந்தது.  இந்த விபத்தை தொடர்ந்து பட்டாசு ஆலை மேலாளர் ராஜேஷ், போர்மென் சுப்புராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். 

இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். 

நேற்றைய தினம் சேலம் மாவட்டம் திரௌபதி அம்மன் கோயில் விழாவுக்காக பைக்கில் மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு மீது தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சதறியதில் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (29), தமிழ்செல்வன் (11), கார்த்தி ( 11) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.  அவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Firecracker accidents in sivakasi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share