விவசாயிகளுக்கு ஆடு, மாடு மற்றும் தேனி வளர்க்க ரூ.50 கோடி மதிப்பில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்:
விவசாயிகளுக்கு மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, தேனி வளர்ப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி மதிப்பில் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில்நுட்பம் பற்றியான சந்தேகங்களை விவசாயிகளுக்கு விளக்குவதற்காக வட்டார அளவில் வேளாண் விஞ்ஞானிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.
385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன் மின்னணு உதவி மையங்கள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1000 ஹெக்டேரில் செளசெள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவார்கள்.
செல்வம்