வழக்கறிஞர்கள் பெயரை பயன்படுத்தி போலி புகார் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

Fake complaint using lawyers names

பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. Fake complaint using lawyers names

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அமலன். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். 

அதில்,  “உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.

எனது வழக்கறிஞர் அறைக்கு கடிதம் ஒன்று வந்தது. அதைப் படித்துப் பார்த்தபோது காவல்துறை கண்காணிப்பாளர் மீது நான் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்ததாகவும் அந்த புகாருக்கு நான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் வந்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்மன் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் நான் இதுபோன்ற ஒரு புகாரை காவல் துறை அதிகாரிக்கு எதிராக கொடுக்கவில்லை.

எனவே இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

அப்போதுதான் எனக்கு நடந்தது போல் பல வழக்கறிஞர்களுக்கும் இதுபோன்று நடந்திருப்பது தெரியவந்தது.

பல மூத்த வழக்கறிஞர்களின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குடியரசு தலைவர், பிரதமர், ஆகியோருக்கு போலியான புகார்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

இதுபோன்று வழக்கறிஞர்களின் பெயரை தவறாக பயன்படுத்துவதால் மூத்த வழக்கறிஞர்கள் மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாகின்றனர்.

போலி புகார் காரணமாக உயர் அதிகாரிகளின் நேரமும் வீணடிக்கப்படுகிறது. எனவே பிறரது பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். Fake complaint using lawyers names

இந்த மனு நீதிபதி தனபால் முன் இன்று (ஏப்ரல் 30) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த புகார் போல் அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் அரசு வழக்கறிஞர்கள் பெயரை பயன்படுத்தி பல பொய் புகார்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. நீதிபதிகளுக்கும் கூட இதுபோன்று புகார் சென்றுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார். Fake complaint using lawyers names

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share