fவெள்ளியைக் குறிவைக்கும் இந்தியர்கள்!

Published On:

| By Balaji

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ விளையாட்டில் இந்தியா முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

அர்ஜெண்டினாவின் பூயூரோஸ் ஏர்ஸ் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் இம்மாதம் 18ஆம் தேதி நிறைவடைகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 3,997 வீரர்கள் இந்த இளையோர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 69 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் சுமார் 13 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதில் அக்டோபர் 8ஆம் தேதி நடந்த ஜூடோ போட்டியில் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாபாபி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 16 வயதான இவர் 44 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று இந்தப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இந்தத் தொடரின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த தாபாபி தேவி தகுதிச் சுற்றில் கொசாவாவைச் சேர்ந்த எர்வாவை வீழ்த்தியிருந்தார். அரையிறுதியில் குரோஷியாவைச் சேர்ந்த விக்டோரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், இறுதிப்போட்டியில் வெனிசுலாவைச் சேர்ந்த மரியா ஜிம்னஸை எதிர்கொள்ள முடியாமல் 11 நிமிடங்களில் தோல்வியைத் தழுவினார் தாபாபி. இந்த வெற்றியின் மூலம் மரியா தங்கப் பதக்கத்தை தட்டிச்செல்ல, தாபாபிக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது. ஜூடோ பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டில் நடந்த ஆசிய கேடட் போட்டியில் தங்கமும், ஜூனியர் ஆசியக் கோப்பையையும் தாபாபி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அக்டோபர் 7ஆம் தேதி நடந்த போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த தூஷர் மானே வெள்ளிப் பதக்கம் வென்றார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share