சீமான் குழந்தைக்கு மேள தாளங்களுடன் சென்று சீர் செய்த அனிதா ராதா கிருஷ்ணன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மேள தாளங்களுடன் நேரில் சென்று சீர் கொடுத்து வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், சீமானின் வீட்டிற்குத் தனது ஆதரவாளர்களுடன் மேள தாளங்கள் முழங்க, தட்டுகளில் பழங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்றார். சீமான் தனது வீட்டு வாசலிலேயே நின்று அவரை இன்முகத்தோடு வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, சீமானின் இரண்டாவது பெண் குழந்தைக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்கச் செயின் அணிவித்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share