சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியேற்றார்!

Published On:

| By Selvam

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (மார்ச் 10) சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அறையில் வைத்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செல்வம்

ADVERTISEMENT

முன்றாவது முறையாக அதிபராக பதிவியேற்றார் ஜி ஜிங்பிங்

“12 வருட கனவு நிறைவேறியது”: கவின்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share