இடைத்தேர்தல்: தென்னரசு வேட்புமனு தாக்கல்!

Published On:

| By Selvam

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி துவங்கியது.

காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளர் செந்தில் முருகன், அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் மேனகா ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசுவிற்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதால், அவர் கடைசி நாளான இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக தென்னரசு இன்று காலை மேள தாளத்துடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், ரா.மனோகரன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் யுவராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பிப்ரவரி 10-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

செல்வம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த அதிரடி ஆட்டக்காரர்

“ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை”: ஜெயக்குமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share