தோப்பு வீட்டில் நடந்த இரட்டை கொலை : ஈரோட்டில் பயங்கரம்!

Published On:

| By Kavi

erode double murder

ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். erode double murder

ஈரோடு மாவட்டம் விலாங்காட்டு வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. வயது 75. இவரது மனைவி பாக்கியம். வயது 65. 

இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும் பானுமதி என்ற மகளும் உள்ளனர். 

பிள்ளைகள் இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் உள்ள தோப்பு  வீட்டில் வசித்து வந்தார். 

ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்தார். 

போன் எடுக்காத தந்தை erode double murder

இந்த நிலையில் ராமசாமியின் மகன் கவிசங்கர் தனது அப்பாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச முயன்றிருக்கிறார். 

ஆனால் இரண்டு நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் அவரின் மகன் அக்கம் பக்கத்தினரை போன் மூலம் அழைத்து பார்க்க சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் ராமசாமி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாமல் துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ராமசாமியும் அவரது மனைவி பாக்கியமும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. 

சம்பவ இடத்தில் எஸ் பி சுஜாதா ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. 

இதையடுத்து மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. 

இதற்கிடையே, பிரேதப் பரிசோதனைக்காக இருவரது உடலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்காத வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று ராமசாமியின் உறவினரும் குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர். 

அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது, 30 நாட்களுக்குள் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

தொடர் கொலைகள் erode double murder

இந்த கோரிக்கையை போலீசார் ஏற்றதால் இருவரது உடலையும் வாங்க சம்மதம் தெரிவித்து, இறுதி சடங்கிற்கு தயாராகி வருகின்றனர். 

இந்த சூழலில் ஈரோட்டில் நடந்த இரட்டை கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதோடு கடந்த 2022 முதல் 2025 வரை ஈரோடு திருப்பூரில் நடந்த கொலைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை. erode double murder

9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.

13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.

14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை செய்யப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,

இதுபோன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை “தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்” என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ள மாவட்ட அமைச்சர் முத்துசாமி, “கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த உடனேயே அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் 8 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார். erode double murder

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share