~கொரோனாவுக்கு ஒரு பிளானிங் பூஜை: அப்டேட் குமாரு

entertainment

‘கொரோனா வைரஸ் வராம இருக்க பூஜை பண்ணப் போறாங்களாமே, நீங்க வர்றீங்களா’-னு சொந்தக்காரத் தம்பி ஒருத்தன் ஃபோன் பண்ணி கேட்டான். ஏற்கனவே காய்ச்சல் வந்து படுத்ததுக்கே வீட்டில யாரும் பக்கத்தில கூட வரமாட்டேங்கிறாங்க. நில வேம்பு கஷாயம் குடி, கோமியம் குடி, சாணி வடை சாப்பிடுன்னு டார்சர் வேற. இதுக்கு இடையில பூஜை வேறயான்னு எனக்கு நானே கேட்டுகிட்டேன். இருந்தாலும் தம்பி மனசு கஷ்டப்படக்கூடாதேன்னு ஒரு அக்கறையில, ‘என்ன பூஜை, எங்கப்பா போகணும்’ன்னு கேட்டா, வாட்சப் வாங்கன்னு ஒரு ஃபோட்டோ அனுப்பி விடுறான். அத எடுத்துப் பாத்தா, ‘கொரோனா பரவாம இருக்கவும், பரவினா தடுக்கவும் பூஜை’ன்னு போட்டிருக்காங்க. என்ன ஒண்ணு கோவிட் 19-க்கு பதிலா கோவிட் 18ன்னு எழுதி இருந்துச்சு. ஒரு வேள பூஜை எஃபெக்ட் பத்தி யாராவது கேள்வி கேட்டா, ‘நாங்க கோவிட் 18 தான் பூஜை போட்டோம்’ சொல்லி எஸ்கேப் ஆக இந்த பிளானான்னு ஃபோன் பண்ணி கேட்டா, கட் பண்ணிட்டு போனவன் தான். அப்புறம் ஃபோன் பண்ணா இருமல் சத்தம் கூட வரமாட்டேங்குது. நீங்க அப்டேட்ட படிங்க.

**சரவணன். ℳ**

‘பழைய விஜயகாந்த் மீண்டும் நிச்சயம் வருவார்’ – பிரேமலதா விஜயகாந்த்

மறுபடியும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூட சண்டை போட்டு நாட்டை காப்பாத்தப் போறாரா…?

**Troll Tips Kumaru**

இப்ப தலைவன் தோனி இந்தியன் டீம்ல இல்லாததோட அருமை புரியுதாடா…

அடேய் அது Womens Cricket டா..

**சிலந்தி**

டச்சில் இருப்பதும், இருக்க போவதும்..

செல்போன்’தான்..!!

**mohanram.ko**

மூடியை கழட்டி கொண்டு எழுத கொடுத்த பேனா, காட்டி கொடுத்து விடுகிறது நம் மீதான நம்பிக்கையை

**மயக்குநன்**

ரஜினி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அவருடைய இஷ்டம்!- சுப்பிரமணியன் சுவாமி.

கட்சி ஆரம்பிக்கலைன்னா அவர் தனியாதான் போட்டியிடணும் ஜீ..!

**சரவணன். ℳ**

வயதான பிறகு தான் எல்லோருக்கும் நிலையான ‘முக’வரி’ கிடைக்கிறது

**செங்காந்தள்**

Be patient. டாக்டர்களுக்கு பிடித்த வாசகம்…!!!

**அவருக்கேதான் அது இல்லையே..?!**

இனி, முதல்வரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளிப்போம்!- துரைமுருகன்.

‘வெள்ளக்கார துரை’முருகனா இருப்பார் போலிருக்கே..?!

**ஜால்ரா காக்கா**

“திமுக, அதிமுக ஆட்சி செய்ய பாமக தொடங்கப்படவில்லை” – அன்புமணிராமதாஸ்

ரஜினி கூட கூட்டணி வைக்க போறேன்னு நேரடியா சொல்லுங்க சின்னையா இத சொல்ல ஏன் சுத்தி வளைச்சுட்டு இருக்கீங்க

**கவிஞன் சம்பத்**

எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.

அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது…..!!

-லாக் ஆஃப்

**குமாரு**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *