தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திரக் குடும்பம் என்றால் சிவகுமார் குடும்பம்தான்.இந்தக் குடும்பத்தில் சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என நான்கு நடிகர்கள் உள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெய் பீம் படத்துக்கான விளம்பர வேலைகளில் நடிகர் சூர்யா ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இணையவழியாகப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார் சூர்யா. அப்படி ஒரு நிகழ்ச்சியில், சூர்யாவிடம் இயக்குநராக வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இயக்குநராவது பற்றி எனக்குத் தெரியாது. கார்த்திகூட எதிர்காலத்தில் இயக்குநர் ஆகலாம். எப்போது பார்த்தாலும் நான் ஒரு கதை எழுதுகிறேன். இதுபற்றி ஆய்வு பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான்.
கார்த்திக் இயக்குநர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் ஜோதிகாகூட நிறைய ஐடியா வைத்திருக்கிறார். அவர் இயக்குநர் ஆவதற்குகூட வாய்ப்பு உள்ளது. சாத்தியம் இருக்கிறது. நான் நடிப்பதிலும் தயாரிப்பிலும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று சூர்யா கூறினார்.
ஜோதிகாவுடன் மீண்டும் இணைந்து சூர்யா எப்போது நடிப்பாரா என்று கேட்டபோது, அதற்கு பதில் சொன்ன சூர்யா, “ஸ்கிரிப்ட்… ஸ்கிரிப்ட் வர வேண்டும். ஜோடியாக எல்லாவிதமான கதைகளும் பண்ணி விட்டோம். அடுத்து வேறு ஒரு பரிமாணத்திலான கதை கிடைத்தால் பண்ணலாம் என்று காத்திருக்கிறோம். நிச்சயமாக அப்படி ஒரு படம் பண்ணுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்த தோற்றம் மற்றும் வயதில் இணைந்து என்ன படம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று பார்த்து அதன்படி பண்ணுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
**-அம்பலவாணன்**
�,”