பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்கு தேர்வான இடம்!

Published On:

| By Balaji

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமாக உருவாகிவருகிறது.

இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகிவரும் இந்தப் படத்தை லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துவருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க , ரவிவர்மா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு கடந்த ஏப்ரலில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதன்பிறகு, கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நடக்கவில்லை. லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இன்னும் 50 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருக்கிறதாம். சொல்லப் போனால், படத்துக்கான 75% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. திரையரங்க அனுபவத்தை மனதில் கொண்டே படப்பிடிப்பு உருவாகிவருகிறது.

இந்தப் படத்தின் அடுத்தக் கட்ட ஷூட்டிங் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்தப் படப்பிடிப்பில் கார்த்தி கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால் தமிழ்நாட்டுக்குள்ளேயே படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டது. அதன்படி, பாண்டிச்சேரியை தேர்வு செய்திருக்கிறார் மணிரத்னம்.

பாண்டிச்சேரியில் துவங்கும் படப்பிடிப்பு, அதன்பிறகு மீண்டும் ஹைதராபாத் செல்கிறார்கள். அதோடு, மத்தியபிரதேசத்திலும் ஷூட்டிங் நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்களாம். எப்படியும், அடுத்த இரண்டு மாதத்துக்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு பக்கம் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கிற்குத் தயாராகிறார். இன்னொரு பக்கம், நெட்ஃப்ளிக்ஸில் நவரசா ரிலீஸ் செய்யும் பணிகளையும் கவனித்துவருகிறார் மணிரத்னம். நவரசா ஆந்தாலஜியானது ஆகஸ்ட் 6ஆம் தேதி ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

**- ஆதினி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share