Sஇருளர் வாழ்வியலை பேசும் இருளி!

entertainment

இருளர் வாழ்வியலை கூறும் படைப்பாக உருவாகிறது “இருளி” திரைப்படம்.

சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வரை சென்ற “ஜெய்பீம்” படம், இருளர் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது. தற்போது ஒரு புதிய திரைப்படம் முழுக்க முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது. இருளர்கள் வாழ்க்கை கதையில் ஒரு காதல் திரைப்படமாக உருவாகும் படம் தான் “இருளி”.

பி.ஶ்ரீராம் தேவா, செவ்வானம் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்க, இயக்குநர் மதன் கேப்ரியல் இப்படத்தை இயக்குகிறார். முரளிதரன் கதை எழுதியுள்ளார். வரும் 17.02.2022 அன்று மாசிமக பௌர்ணமி நாளில் கனடா நாட்டு டொரொண்டோவில் பாடல் பதிவு நடக்க, சென்னை மாமல்லபுரம் கடற்கரையில் முதல்கட்ட படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கவுள்ளது.

பி.பி.பாலாஜி இசையில் அ.ப.ராசா பாடல் வரிகளுக்கு செந்தில் கணேஷ், ராஜ் லட்சுமி, முத்துச்சிற்பி, மும்பை ஹம்சிகா ஐயர், ரோஷினி, விதுயனி பரந்தாமன், சாய் சரன் முதலானோர் பாடுகிறார்கள். வரன் ஒளிப்பதிவு செய்கின்றார்.

இப்படத்தில் செந்தில் கணேஷ், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா முதலானோருடன் நடிப்புபயிற்சி பெற்ற மாணவர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.

முழுக்க முழுக்க இதுவரை திரைத்துறை கண்டிராத, இசை மற்றும் நடனம் ஒன்றாக கலந்த இருளர்கள் வாழ்வியல் இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது என்கிறார் இயக்குனர்

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *