விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட்!

entertainment

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இன்று ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 211 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளையில் இந்தியா வெற்றி பெற இன்னும் ஆறு விக்கெட்டுகள் தேவை. இதனால், கடைசி நாள் ஆட்டமான இன்று (டிசம்பர் 30) விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை குவித்தது

இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

ஆனால், தென்னாப்பிரிக்க அணியின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் தென்னாப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் இன்று ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 211 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளையில் இந்தியா வெற்றி பெற இன்னும் ஆறு விக்கெட்டுகள் தேவை.

இதனால், செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டமான இன்று விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *