ஓடிடியில் பூமி வெளியாவதில் சிக்கல் என்ன?

entertainment

ஜெயம்ரவி நடிப்பில் ரிலீசுக்குத் தயாராகியிருக்கும் பூமி படத்தில் உண்மையிலேயே என்ன தான் சிக்கல் என விசாரித்தால் பல தகவல்கள் மிரளவைக்கிறது.

ல‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் பூமி. இந்தப் படத்துக்கு இசை இமான். ஒளிப்பதிவாளராக டெட்லி பணியாற்றியிருக்கிறார். படமானது மே 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஆரம்பத்தில் அறிவித்தது. ஆனால், கொரோனாவினால் படம் தள்ளிப்போனது.

கொரோனாவால் திரையரங்கில் வெளியிட முடியாது என்ற சூழல் நிலவி வருவதால், ஜெயம்ரவியின் 25ஆவது படமாக உருவாகியிருக்கும் பூமி படத்தை ஓடிடியில் வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, படத்தை ஓடிடியிலும் விற்றுவிட்டது படக்குழு.

ஆனால், திரையரங்க ரிலீஸ் என அறிவிக்கும் போதே, படத்தை விநியோகஸ்தர்களிடமும் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு விற்றிருக்கிறது படக்குழு. அதை அப்படியே மூடி மறைத்துவிட்டு, ஓடிடியிலும் படத்தை விற்றிருக்கிறார்கள்.

ஏற்கெனவே திரையரங்க ரிலீஸூக்காக விநியோகஸ்தர்களிடம் விற்றுவிட்டு, ஓடிடியிலும் என இரண்டு இடத்திலும் பணத்தை வாங்கிக் கொண்டு எப்படி விற்றார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த காரணத்தினால் தான், இன்னும் படம் ஓடிடியில் வெளியாகாமல் சிக்கித் தவிக்கிறது.

ஓடிடியில் விற்றது விற்றது தான். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அதனால், படக்குழுவானது விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அவர்களைச் சமாதானப்படுத்தி, ஜெயம்ரவியின் அடுத்தப் படத்தில் இந்தப் பணத்தைக் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது தயாரிப்பு தரப்பு.

அதோடு, பூமி படம் என்னுடையது என ஒருவரும் நடுவில் வந்து பிரச்னை செய்துகொண்டிருக்கிறார். அந்த செய்தி கூட சமீபத்தில் வெளியானது. ஆக, அந்த சிக்கலையும் சரிசெய்ய படக்குழு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தப் பிரச்னையெல்லாம் முடிவுக்கு வந்த பிறகு தான், பூமி படம் வெளியாகும். ஆனால், உறுதியாக ஓடிடி ரிலீஸ் என்பதில் எந்த மாற்றமுமில்லை.

**-ஆதினி**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *