�
கதாநாயகிகள் ஒருகட்டத்தில் அதிகமான சம்பளம் என்பதற்காக தனி பாடலுக்கு நடன காட்சிகளில் நடிப்பார்கள். அதேசமயம் முன்னணி நடிகையாக இருந்தாலும் கூட நட்புக்காக இன்னொருவரின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த இரண்டாவது ரகத்தில் தான் தற்போது சமந்தாவும் சேர்ந்துள்ளார்.
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா சம்மதித்து விட்டார் என்பதும் அதற்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்பதும் தெரிந்த செய்தி தான். இந்தப்பாடலை ஐதராபாத் நகரிலேயே பிரமாண்ட செட் அமைத்து படமாக்குவதற்கு தீர்மானித்து இருந்தார்களாம்..
ஆனால் சமந்தாவோ நகரை விட்டு சற்றே தொலைவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்தப்பாடலின் படப்பிடிப்பை நடத்துமாறு இயக்குனர் சுகுமாரிடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம். சமீபத்தில் தனது கணவர் நாகசைதன்யாவிடம் இருந்து பிரிவதாக அறிவித்த சமந்தா, நகரின் அருகில் படப்பிடிப்பு நடந்தால் மீடியாக்களை சந்திக்க வேண்டி வருமே என்பதால் அதை தவிர்ப்பதற்காக இந்த இடமாற்ற கோரிக்கையை வைத்துள்ளாராம்.
**அம்பலவாணன்**
�,