pஇந்தி இயக்குநருடன் இணையும் அல்லு அர்ஜுன்

entertainment

இந்தி சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கங்குபாய் கத்தியவாடி’ படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது.

வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இந்தி பட இயக்குநர்களில் இவரும் ஒருவர்.
‘புஷ்பா’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ரூ.100 கோடி வசூலைப் பெற்ற நடிகராக மாறியுள்ள அல்லு அர்ஜுன் அங்கும் தன்னுடைய தடத்தைப் பதித்துள்ளார்.

நேற்று இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை அல்லு அர்ஜுன் சந்தித்துப் பேசியுள்ளார்.

‘கங்குபாய் கத்தியவாடி’ படத்திற்குப் பிறகு சஞ்சய் லீலா இயக்கப் போகும் படம் எது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அல்லு அர்ஜுன் அடுத்ததாக ‘புஷ்பா 2’ படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு நடிப்பதற்காக சில கதைகளை சஞ்சய் லீலாவிடம் அல்லு அர்ஜுன் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ‘புஷ்பா’ படத்தின் மூலம் கிடைத்த பான்-இந்தியா அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக சஞ்சய் பன்சாலி படத்தில் நடிக்கத்தான் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினாரா என்ற யூகங்கள் எழுந்துள்ளது.

அதேபோன்று சஞ்சய் லீலாவுடன் அல்லு அர்ஜுன் கூட்டணி சேர்ந்தால் படம் எப்படி இருக்கும் என அவரது ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *