ஷங்கருடன் இணைந்தது எப்படி?: கார்த்திக் சுப்பராஜ்

entertainment

இயக்குநர் ஷங்கருடன் ராம் சரண் படத்தில் இணைந்தது குறித்து கார்த்திக் சுப்பராஜ் மனம் திறந்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மகான்’. படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்து வரும் நிலையில் படத்தின் வெற்றியை படக்குழு மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

அதுபோன்று நடிகர் ராம் சரண் நடிக்கும் அடுத்த தெலுங்கு படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தை ஷங்கர் இயக்க இதற்கு கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். இதற்கான அறிவிப்பும் முன்பே வெளியிடப்பட்டது.

தற்போது ஷங்கர் படத்தில் இணைந்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ள கார்த்திக் சுப்பராஜ், “இயக்குநர் மணிரத்தினம் மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து இயக்குநர்கள் கலந்துரையாட மற்றும் நல்ல நட்பை உருவாக்கி கொள்ள ஒரு வாட்ஸ் அப் க்ரூப் தொடங்கினார்கள். இந்த புதிய முயற்சியின் மூலம் எனக்கும் ஷங்கர் அவர்களுக்கும் இடையில் நல்ல நட்பு உருவானது. ஒரு நாள் ஷங்கர் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையில் உதவும்படி என்னிடம் கேட்டார். உடனே அவர் கேட்ட நேரத்திற்குள் நான் கதையை கொடுத்து விட்டேன். அவருக்கும் அது பிடித்திருந்தது.

அந்த கதை என்னிடம் ஏற்கனவே இருந்த ஒன்றுதான். அதன் கான்செப்ட்டை இன்னும் விரிவாக டெவலப் செய்து கொடுத்ததில் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது” என்று கூறியுள்ளார்.

ராம் சரணின் 15வது படமான இதில் கீரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இதற்கு தமன் இசையமைக்க தில் ராஜூ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஆதிரா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *