அடப்பாவிகளா, இதையே இப்பதான் உணர்றீங்களா..?


மயக்குநன்
தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்!- மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.
எட்டாம இருந்த எட்டு வழிச்சாலை இனி எட்ட வாய்ப்பிருக்குனு சொல்றாரு போல..?!
சரவணன். 𝓜
இந்தியாவை அசைக்க உலகில் எந்த சக்தியும் இல்லை!- பிரதமர் மோடி.
எலக்சன் வந்துட்டா போதும், சின்ராசை கையிலேயே புடிக்க முடியாது..
கோழியின் கிறுக்கல்!!
கொரோனா காஞ்சனா படம் மாதிரி ஆகிடுச்சு,
முதல் பாகம் பயமா இருந்துச்சு,
போக போக 'ச்சீ போ'ன்னு மாறிடுச்சு!!
முன்னறிவிப்பு
முன்னறிவிப்பு
தமிழ்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான (சில காலம்) செய்தி .
நாளை வேட்பு மனுத்தாக்கல் நடைபெற இருப்பதால்
இன்று முதல் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிடும்
இந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு இருக்காது கூடுதல்
தளர்வுகள் கொள்ளப்படும்
மார்ச் 4 ஆம் தேதி வரை கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் இருக்காது
ஏனென்றால் ,
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் ,
தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க (கொரோனாவிடம்)
கொரோனா தமிழ் மக்களின் மீது கோபம் கொள்ளாமல்
ஒரு மாதம் கொரோனா வேறு மாநிலத்திற்கு பயணம் செய்ய இருக்கிறது.
அதனால்,
நாம் (தமிழக மக்கள்) ஒரு மாத காலம் முகமூடி /பரிசோதனை/தடுப்பூசி அச்சமின்றி இருக்கலாம் .