மகேஷ்பாபு முதல் சிரஞ்சீவி வரை… புத்துயிர் பெறும் தெலுங்கு சினிமா!

entertainment

கொரோனா சூழலால் திரைத்துறை சந்திக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று படப்பிடிப்பு நிறுத்தப்படுவது தான். தமிழ் மட்டுமல்ல, பல மொழி சினிமாக்களும் படப்பிடிப்பு நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டது.

தற்பொழுது, எல்லா மொழிகளிலும் படப்பிடிப்பு மீண்டும் உயிர்பெற்றுவருகிறது. அப்படி, தெலுங்கு சினிமாவும் இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது. தெலுங்கில் உருவாகிவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு ரீஸ்டார்ட் ஆகியிருக்கிறது. அப்படி, துவங்கியிருக்கும் படங்கள் என்னென்னெ என்று பார்த்துவிடுவோம்.

முதல் படம் பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் `சர்காரு வாரி பாட்டா’. இப்படத்தின் முதல் ஷெட்யூல் துபாயில் துவங்கியது. தற்பொழுது, மீதம் இருக்கும் ஷூட் ஹைதராபாத்தில் துவங்கியிருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படம் முடிய இருக்கிறது.

அடுத்தப்படம், மலையாளத்தில் பேய் ஹிட்டான `ஐய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக். பவன் கல்யாண் – ராணா இருவரும் ப்ரித்விராஜ் & பிஜூ மேனன் நடித்த ரோல்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் துவங்கிவிட்டது.

மூன்றாவதாக, சிரஞ்சீவி – ராம் சரண் சேர்ந்து நடிக்கும் `ஆச்சார்யா’. இதன் கடைசி ஷெட்யூல் துவங்கிவிட்டது. முடிந்ததும் போஸ்ட் புரொடக்ஷன் நடக்க இருக்கிறதாம்.

அடுத்த படம் அல்லு அர்ஜூன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் `புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தின் முதல் பாக ஷூட்டிங் முடியவே இன்னும் ஒன்றரை மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதாம். தற்பொழுது, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் `அகண்டா’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பும் துவங்கிவிட்டது. தொடர்ந்து, சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கும் `சகுந்தலம்’ படமும் துவங்கியிருக்கிறது. இப்படி, அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக துவங்கியிருப்பதால் தெலுங்கு சினிமா மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது.

**-ஆதினி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *