dதிரிஷ்யம் – 2 : கமலுடன் நதியா நடிப்பாரா?

entertainment

கொரோனா ஊரடங்கு காலத்தில் சினிமா செய்திகளை மட்டுமே வெளியிட்டு வரும் ஊடகங்களுக்கு செய்தி பஞ்சம், அப்போது திரிஷ்யம்-2 படம் சம்பந்தமான யூகங்கள் அதிக நாட்கள் செய்திகளாக வெளியிடப்பட்டன.

கௌதமிக்கும் – கமல்ஹாசனுக்கும் பிரிவு ஏற்பட்டதால் இணைந்து நடிக்க வாய்ப்பு இல்லை, அந்தப்படம் தமிழில் ரீமேக் செய்யும் முடிவு கைவிடப்பட்டது, என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இப்போது இரண்டாவது சீசன் தொடங்கியிருக்கிறது.

திரிஷ்யம் – 2படம் தமிழில் ரீமேக் செய்யப்படுமா…? அதில் கமல்ஹாசன் நடிப்பாரா..? எப்போது படம் துவங்கும்..? என்பதெல்லாம் பின்னுக்குப் போய் தற்போது “நடிகை நதியா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா..?” என்கிற கேள்விதான் தமிழ் சினிமாவில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

நடிகை நதியா 1985-ம் ஆண்டு பூவே பூச்சூட வா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சிவக்குமார். சத்யராஜ், பிரபு, மோகன், சுரேஷ், ராம்கி, ரகுவரன் என்று தமிழின் முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

தனது கல்யாணத்திற்கு முன்பாக நதியா 1994-ம் ஆண்டு கடைசியாக தமிழில் நாயகியாக நடித்த படம் ராஜகுமாரன். இந்தப் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திரையுலகத்தில் இருந்து விடைபெற்றார்.

இந்தக் காலக்கட்டத்தில் அவர் கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. 1987 ம் ஆண்டு வெளியான காதல் பரிசு படத்தில் ராதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் அட்வான்ஸ் வாங்கியிருந்த நதியா பின்பு அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு அவர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க கமல் தரப்பில் இருந்து எந்த இயக்குநரும் முயற்சிக்கவில்லை என்கிறார்கள் திரையுலகப் பிரமுகர்கள்.

இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து நதியா, கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கௌதமியால் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது

திரிஷ்யம்-2 படத்தின் தமிழ் பதிப்பில் நடிப்பதற்காக முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த கெளதமியிடம் பேசியுள்ளனர். தொழில் என்கிற அடிப்படையில் நடிப்பதில் தவறு இல்லை என்று அவரிடம் பேசியுள்ளனர். இல்லை அது இருவருக்குமே நல்லது இல்லை என்று அவர் மறுத்துவிட்டார் என கௌதமிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகிறது.

கமல்ஹாசன் தன்னை கரைசேர்ப்பார் என்ற நம்பிக்கையில் திரிஷ்யம் – 2 படத்தின் தமிழ் மறுபதிப்பு உரிமையை வாங்கியுள்ள ஸ்ரீப்ரியாவின் கடுமையான முயற்சிகளுக்கு பின் கௌதமி கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது நதியாவிடம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நதியா ஏற்கெனவே ‘திரிஷ்யம்-1’ மற்றும் ‘திரிஷ்யம்-2’ தெலுங்கு மறுபதிப்பில் மலையாளத்தில் ஆஷா சரத் நடித்திருந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் இவர் கௌதமி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் கோடம்பாக்கதில்.

தமிழ்சினிமாவில் எதுவும் மாறுதலுக்கு உட்பட்டது என்பதை கமல்ஹாசன் – நதியா இணைந்து நடித்து உறுதி செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *