Pபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ!

entertainment

இயக்கிய எல்லா படங்களும் ஹிட் லிஸ்ட் எனும் சக்சஸ் ரேட், ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டுமே கைகூடும். அப்படியான இளம் இயக்குநர்கள் தமிழில் ஒரு சிலரே. அந்த வகையில் கதையிலும், திரை மொழியிலும் புதுமையைக் காட்டுபவர் இயக்குநர் பா.ரஞ்சித்.

தினேஷ் நடிப்பில் அட்ட கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பா.ரஞ்சித். முதல் படத்திலேயே தீவிர அரசியலை மெளனமாகப் பேசியவர், இரண்டாம் படமான மெட்ராஸ் மூலம் அதை வெளிப்படையாகப் பேசினார். அதன்பிறகு, ரஜினியுடன் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கினார். இயக்கத்தோடு தயாரிப்பிலும் இறங்கினார் ரஞ்சித். நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார்.

ரஜினி நடிக்க உருவான காலா படத்துக்குப் பிறகு, பிர்சா முண்டா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டுமென தீவிர முயற்சிகளில் இருந்தார். ஆனால், பட்ஜெட், நடிகர்கள், கதை எல்லாம் கைகூடுவதில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் ஷார்ட் டைமில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டார். அப்படி, ஆர்யா நடிக்க சார்பட்டா பரம்பரை படம் தயாராகி வருகிறது. இந்தப் படம் விரைவிலேயே வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், பா.ரஞ்சித்தின் அடுத்தப் படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்க இருப்பதாக ஒரு தகவல். படத்தின் கதை குறித்து சூர்யாவுடன் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு, வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல், சிவா இயக்கத்தில் ஒரு படம் கமிட் செய்துவைத்திருக்கிறார். இந்த இயக்குநர்களின் பட்டியலில் பா.ரஞ்சித் இடம்பெறுவார் என்றே சொல்லப்படுகிறது.

**- ஆதினி**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *