ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சாதனை படைத்துவிட்டு திரும்பிய நிலையில், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற பிப்ரவரி 5ஆம்தேதி சென்னையில் தொடங்குகிறது.
இந்த நிலையில், சவால்மிக்க உண்மையான அணி அடுத்த வாரத்தில் இந்தியா வருகை தர உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆஸ்திரேலிய மண்ணில் பல தடைகளை தாண்டி டெஸ்ட் தொடரை வென்றதால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் சவால்மிக்க உண்மையான அணி அடுத்த வாரத்தில் இந்தியா வருகை தர உள்ளது. உங்களது சொந்த மண்ணில் அவர்களைத் தோற்கடித்தாக வேண்டும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். அடுத்த இரு வாரங்களில் அதிகமாக கொண்டாடுவதைத் தவிர்த்து விடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
**-ராஜ்**�,