சிங்கம், கடைக்குட்டி சிங்கம் என ஒரே குடும்பத்திலுள்ள சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் நடித்ததால் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற பெயரை கார்த்தி ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டிங் செய்துகொண்டிருக்கின்றனர். காரணம், நடிகர் கார்த்திக்கு மகன் பிறந்திருக்கிறார்.
தமிழகத்தில் ‘கலைக் குடும்பம்’ என்று அறியப்படும் சிவக்குமார் குடும்பத்தில், தற்போதைக்கு கடைசி வாரிசாக கார்த்திக்கு மகன் பிறந்திருக்கிறார். கார்த்தி மற்றும் அவரது மனைவி ரஞ்சனி ஆகியோருக்குத் திருமணமாகி உமையாள் என்ற மகள் இருக்கிறார். உமையாள் பிறந்து கிட்டத்தட்ட 7 வருடம் கழித்து கார்த்திக்கு இரண்டாவது மகன் பிறந்திருக்கிறார் என்பதனால், அந்தக் குழந்தையை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
கார்த்தி வீட்டில் கூட இதெல்லாம் யோசித்திருப்பார்களா என்று தோன்றும் வகையில், 10ஆம் மாதமான அக்டோபர் 20ஆம் தேதி பிறந்திருப்பதால் 20-10-2020 என்ற ஃபேன்சி நம்பரில் குழந்தை பிறந்திருக்கிறது என்றெல்லாம் சொல்லி மகிழ்ந்துகொள்கின்றனர் ரசிகர்கள்.
கார்த்தியின் மனைவி கர்ப்பமாக இருப்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. இந்த காரணத்தினால் தான், ஷூட்டிங்குக்கு அனுமதி கொடுத்ததும் மீதமிருந்த ‘சுல்தான்’ படத்தையும் கார்த்தி முடித்துக்கொடுத்துவிட்டார் போல என ஆச்சர்யமடைகிறது தமிழ் சினிமா.
-முத்து-�,