அட்லீ மசாலா சினிமாவில் மேஜிக் செய்பவர்: கரண் ஜோகர்

entertainment

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் தமிழ் சினிமா இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் அட்லீ ஆகியோருக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தி சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் எனப் பன்முகத் தன்மையுடன் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் கரண் ஜோகர். இவர் தனது ‘தர்மா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் பல பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தான் விரும்பி ரசித்த தென்னிந்தியத் திரைப்படங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், **“வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தை நான் பார்த்தேன். அடக்கடவுளே, அந்தத் திரைப்படம் என் மனதைக் கொள்ளையடித்துவிட்டது. தனுஷ் அபாரமாக நடித்துள்ளார். அந்தப் படத்தைப் பார்க்கும் போது சீட்டின் நுனிக்கே வந்து விட்டேன்.”** என்று கூறினார்.

மேலும், **“அட்லீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அது மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாகியிருந்தது. அவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களையும் நான் பார்த்தேன். அனைத்துமே எனக்குப் பிடித்துப் போனது. அட்லீ மசாலா சினிமாவில் மேஜிக் செய்பவர்”** என கரண் ஜோகர் இயக்குநர் அட்லீக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

அது தொடர்பான பதிவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் அட்லீ, ‘நன்றி சார், lots of love’ என்று பதிலளித்திருந்தார். பிகில் திரைப்படத்திற்கு அட்லீ, பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றப்போவதாக சில தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *