sபாலிவுட்டையும் விடாத தென்னிந்திய பேய்கள்!

entertainment

இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமாதான் என்று சொல்லும் காலம் ஒன்று இருந்தது. இந்திப் படங்களுக்குக்கூட ஷூட்டிங்கும் டப்பிங்கும் நடத்த தென்னிந்தியாவுக்கு ஓடோடி வந்த ஸ்டார்கள் ரிட்டையர்ட் ஆகிவிட்டபிறகு, அப்படி தென்னிந்தியா வருவதை நிறுத்திக் கொண்டனர் இந்தித் திரையுலகினர். ஆனால், எத்தனை நாட்கள் அப்படியே இருக்க முடியும்?

தமிழ் சினிமாவை சில ஆண்டுகளாக பேய் பிடித்துக்கொண்டு இருந்தது. எப்போது தியேட்டருக்குப் போனாலும் பேய் படமாகக் காணப்பட்ட காலம் இப்போது இல்லை. தமிழ் சினிமா கொஞ்சம் ஓய்வில் இருக்கிறது. அப்படி ஓய்விலிருக்கும் தமிழ் சினிமாவின் நல்ல விஷயங்களையெல்லாம் வெளியே கொண்டு செல்வோம் என முடிவெடுத்து, மிகவும் பிடித்துப்போய் அக்‌ஷய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘லக்‌ஷ்மி பாம்’.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்துவரும் அக்‌ஷய் இப்போது மீண்டுமொரு திரைப்படத்தின் மூலம், தென்னிந்தியாவின் பேய் ஃபீவரில் இணைகிறார். அனுஷ்கா நடிப்பில் 2018இல் வெளியான பாகமதி திரைப்படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை அக்‌ஷய் குமார் வாங்கியிருக்கிறார். உரிமையை வாங்கினாரே தவிர, மொத்த புராஜெக்டிலும் பல்வேறு நபர்களைச் சேர்த்திருக்கிறார்.

கோயிலுக்குச் சொந்தமான இடத்திலிருக்கும் சிலைகள் திருடுபோவது குறித்து, நேர்மையான கலெக்டராக இருக்கும் அனுஷ்கா கேட்கும்போது, அவரை பைத்தியம் என முத்திரை குத்தி தனியே ஒரு ரூமில் அடைத்து வைக்கின்றனர். அங்கிருந்து தப்பித்து அவர் வெளியே போவது தான் இந்தக் கதை. பேய் திரைப்படமாக இருந்தாலும், அதற்குப் பின்னால் பேசிய விஷயங்கள் அனைத்தும் இந்தி அளவில் பேசவேண்டியவை. எனவே, இந்தத் திரைப்படத்தை இந்தியில் அக்‌ஷய் குமார் எடுக்கிறார். இதற்கு துர்காவதி எனப் பெயரிட்டிருக்கின்றனர்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *