n
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள இரு திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் டகால்டி திரைப்படம் ஜனவரி 31-ஆம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் நடித்து மூன்று வருடங்களுக்கு முன்பே தயாராகி ரிலீஸ் ஆகாமல் இருந்த சர்வர் சுந்தரம் படமும் அதே நாளில் ரிலீசாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகர் சந்தானம் பல படங்களில் நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். காமெடி நடிகராக களம் கண்டவர் ‘அறை எண் 3௦5 இல் கடவுள்’ திரைப்படம் மூலமாக் கதாநாயகராக உருவெடுத்தார். மீண்டும் நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் மூலம் முழுநேர கதாநாயகனாக வலம் வரத் துவங்கினார்.
இந்நிலையில் 2௦16-ஆம் ஆண்டு சர்வர் சுந்தரம் என்ற படத்தில் அவர் நடித்திருந்தார், ஆனந்த் பால்கி இயக்கியிருந்த இந்தப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருந்தது. படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இருந்த நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பல்வேறு காரணங்களால் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சர்வம் சுந்தரம் திரைப்படம் ஜனவரி 31 அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் தான் சந்தானம் நடித்த டகால்டியும் வெளியாகிறது என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.�,