பிஇ படிக்கும் 9,981 மாணவர்களுக்கு ரூ.1000! கட் ஆப்-ல் முதலிடம் பிடித்த மாணவி!

Published On:

| By Kalai

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். 1,58, 157 மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டின் கீழ் 22,587 மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் 12,666 மாணவர்களும், 9981 மாணவிகளும் உள்ளனர், விளையாட்டுப் பிரிவின் கீழ் 1258 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் ராணுவத்தினர் வாரிசு அடிப்படையில் 970 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 203 மாணவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் தொடங்கும் கலந்தாய்வு அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன. தமிழ்நாட்டில் சுயநிதி

பொறியியல் கல்லூரிகளில் 1,96,627 இடங்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 900 இடங்களும் உள்ளன.

இந்த கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடாக 1, 48,811 இடங்கள் உள்ளன. இதில் அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 10,968 பேர் பயனடைய இருக்கின்றனர். இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரும் 9,981 அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் கட் ஆப்-ல் கேரள மாநிலம் கொல்லத்தில் படித்த தமிழக மாணவி ரஞ்சிதா 200/200 எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share