அமலாக்கத் துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, கரூரில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீடு, மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது. மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை கிரீன் வேஸ் இல்லம் முன்பாக இன்று (ஜூன் 13) செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி,
வருமான வரித்துறையை தொடர்ந்து அமலாக்கத்துறை வந்திருக்கிறது. நான் வாக்கிங் சென்ற போது அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். இதனால் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் பாதியிலேயே டாக்ஸி பிடித்து வந்துள்ளேன்.
என்ன நோக்கத்தில் வந்திருக்கிறார்கள் என்று சோதனை முடிந்தால் தான் சொல்ல முடியும். வருமான வரித்துறை சோதனையில் என்னென்ன எடுத்திருக்கிறார்கள் என கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார்கள். ஐடி அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டாலும் உரிய விளக்கம் தருவோம்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்ளே இருக்கிறார்கள். நான் உள்ளே செல்லவில்லை என்றால் தவறாகிவிடும். சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சோதனை முடிவதற்குள் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: ஐ.டி. ரெய்டில் சிக்கிய பட்டியல்… செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்!
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை