சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

Published On:

| By vanangamudi

Chennai ED Raid

சென்னையில் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அரவிந்த் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share