தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாழும் பொதுமக்களின் செல்போன்களில் இன்று (அக்டோபர் 20) காலை சரியாக 11.27 மணிக்கு திடீரென எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டிருக்கும். என்ன இந்த சத்தம் என்று பலரும் பீதியடைந்திருக்கலாம்.
எனினும் எந்தவித அச்சமும் பதட்டமும் தேவையில்லை என்று மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அதற்கான காரணத்தையும் மத்திய அரசு அந்த எச்சரிக்கை ஒலியுடன் அனுப்பிய குறுந்தகவல் மூலம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அதில் “இந்த ஒலியானது இந்திய அளவில் அவசரகால (சுனாமி, மழை, வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்றவை) எச்சரிக்கையை சோதனை செய்வதற்காக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாக கொண்டு இது நடத்தப்படுகிறது.
இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அனுமதியின் கீழ் நடத்தப்பட்ட சோதனை. எனவே, பொதுமக்கள் இதனால் அச்சப்பட வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த எச்சரிக்கை ஒலி/அதிர்வு சோதனை இன்று நடத்தப்படும் என்று நேற்றே அனைத்து செல்போன் பயனர்களுக்கு தொலைத்தொடர்புத் துறை மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
கிறிஸ்டோபர் ஜெமா
ஆன்மிக முடிச்சுகளை அறுத்த பங்காரு அடிகளார்: வைரமுத்து இரங்கல்!