நிலக்கரி சுரங்க விவகாரம் : நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

Published On:

| By christopher

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸை இன்று (ஏப்ரல் 5) வழங்கியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த 29-ந்தேதி மத்திய நிலக்கரி அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக மக்களைவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸை வழங்கியுள்ளார்.

அதில் காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் விடுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிலக்கரி சுரங்க விவகாரத்தில் நிலக்கரித்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உரிய பதில் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

செலவைக் குறைக்க ஊழியர்களின் உணவில் கைவைத்த கூகுள்

குஜராத் அணியின் வெற்றிக்கு உதவிய தமிழக வீரர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share